முகப்பு / Blog / இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள் புனித வெள்ளி
Blog

இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள் புனித வெள்ளி

G
செய்தி ஆசிரியர்
Go2Tamil
18 Apr 2025, 02:30
6 பார்வைகள்
பகிர் :
இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள் புனித வெள்ளி

புனித வெள்ளி என்பது இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாளாகும்.

புனித வெள்ளி கொண்டாடப்படுவதற்கு காரணம், இயேசுவின் சிலுவையில்  அடி அடிக்கப்பட்டு ,உயிர் நீத்த தினத்தையும் அவர் அடைந்த துன்பத்தையே நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படும் நாள் தான் புனித வெள்ளி.

கி.பி 33 ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை  இயேசு இறந்தார் என கருதப்படுகிறது. யுதாஸ் என்ற அவரது  சீடர் 30 வெள்ளி காசுகளுக்காக

இயேசுவை காட்டிக் கொடுத்த வரலாறு கூறுகிறது.

வரலாற்றின்படி  எரிசேலம் காவலர்களால் கைது செய்யப்பட்டு சவுக்கால் அடித்த தண்டனை  அளிக்கப்பட்டது.  இயேசுவை தலைவராக ஏற்றுக்கொண்ட பல மக்கள்  அவரின் நிலையை பார்த்து பார்த்து  கதறி அழுதனர் .அவருக்கு முள்  கீரிடம்  அணியப்பட்டு, சிலுவையில் சுமந்து கொண்டும் செல்லும் வழி முழுவதும் சவுக்கில்  அடித்தும் துன்புறுத்தினர்.

இந்த நிகழ்ச்சி நடந்த அந்த நேரம் மத்திய நேரமாக இருந்தாலும் வானம் இருட்டாக காணப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. ஏசுநாதர் சிலுவையில் அழைக்கப்பட்டு முதல் மூன்று மணி நேரத்திற்குள்அதனை நினைவு கூறும் வகையில் அந்த மூன்று மணி நேரத்தை மையமாகக் கொண்டு  மும்மணி தியானம் என்ற பிரார்த்தனை பிற தேவாலயங்களில் நடக்கப்படும்.

இயேசுவின் மரணமானது உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய சரித்திரத்தை படைத்த ஒன்றாகும் .அவர் உயிர் தொலைந்த நாளை உலகம் மிகவும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடப்படுகின்றன.

அவர் சொன்னபடியே மரணத்தின் பிறகு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து இன்றும் திறக்கப்பட்ட ஒரே கல்லறையாக விளங்குகிறது அவரது கல்லறை. 

இயேசு வாழ்ந்த காலத்தில் ரோம பேரரசு பல தேசங்களை தங்கள் வசப்படுத்தி ஆட்சி செய்து வந்தன. அந்தக் காலத்தில் ஒவ்வொரு நாட்டிலும் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனை வித்தியாசமாகவும் மிகவும் கொடுமையாகவும் இருக்கும் .

அந்த வகையில் தான் ரோம பேரரசு குற்றவாளிகளுக்கு சிறைச்சாலையில் இடுவது  சிலுவைகளின் தொங்கவிடுவதும், ஆணி அடிப்பதும் என்று பலவித தண்டனைகளை கொடுத்து வந்தது.

கட்டுரையைப் பகிர்க:
G

Go2Tamil

செய்தி ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர். சமூக, அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளை துல்லியமாகவும் விரைவாகவும் வாசகர்களுக்கு வழங்குவதில் வல்லவர்.

Get Notifications / செய்திகளைப் பெறுக

You can unsubscribe from notifications anytime.