கரிசலாங்கண்ணி இலையின் நன்மைகள் | benefits of Kareisalankkanni illai in tamil
benefits of Kareisalankkanni illai
கரிசலாங்கண்ணி இலையின் ஏராளமான நன்மைகள் உள்ளது அதில் முதன்மையாக கல்லீரல் பிரச்சனை குணப்படுத்துவதற்கும், தலைமுடி வளர்ச்சியை அதிகமாக தூண்டுவதற்கும், இரும்புச்சத்தை அதிகப்படுத்துவதற்கும், கால்சியத்தின் அளவை அதிகரித்து, எலும்புகளை வலுவாக்குவதற்கும், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி போன்ற அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
கரிசலாங்கண்ணி இலையின் பயன்கள்
கரிசலாங்கண்ணி பொடி இலையின் பொடியை எடுத்துக்கொண்டு வரும் பொழுது கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல
தீர்வாக இருக்கும். உடலில் உள்ள பித்த நீர்களை சிறுநீரகமூலம் வெளியேற்றுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் கரிசலாங்கண்ணி இலையின் பொடியை அவர்களது பத்திய உணவில் வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டு,வரும்போது மஞ்சள் காமாலையால் ஆனது முழுமையாக குணமடையும்.
நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும்:
தொற்று நோய்களால் ஏற்பட்ட காயம் மற்றும் புண்களை சரி செய்வதற்கு கரிசலாங்கண்ணி பொடி எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
பச்சை நிறம் கொண்ட காய்கறியை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதால் நமக்கு ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்களும் அதிகமாக கிடைக்கும்.
இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலுக்கு அதிகப்படுத்தலாம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும் பொழுது தேவையற்ற பிரச்சனைகளை உடலில் இருந்து தவிர்க்கலாம்.
உடலில் உள்ள வீக்கத்தை மூட்டு வலி நீரிழிவு நோய் இதயம் பிரச்சனை உள்ளவர்கள் அனைவருக்கும் கரிசலாங்கண்ணி ஆனது மிகப்பெரிய அமிர்தமாக இருக்கும்.
ஏனென்றால் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு கரிசலாங்கண்ணி நல்ல தீர்வாக அமையும். அலர்ஜி பிரச்சனை உள்ளவர்களுக்கு கரிசலாங்கண்ணி இலையை அலர்ஜி உள்ள இடத்தில் எடுத்துக் கொள்வதன் மூலம் அந்த அலர்ஜி பிரச்சனையை குறைக்கலாம்.

கரிசலாங்கண்ணியில் மிகப்பெரிய பலன் அனைவரும் அறிந்திருப்போம். அதுவே முடி வளர்ச்சிக்கானது .இளநரை முடி உதிர்தல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கரிசலாங்கண்ணி இலையை, அடிக்கடி அவரது உணவிலும், ஹார் பாக் போன்ற விதத்திலும், அதனை பயன்படுத்துவது மிகவும் நல்லது. கரிசலாங்கண்ணி ஹேர் பார்க்கை பயன்படுத்துவதன் மூலம் அவர்களது நரைமுடியாது கரு நிறத்தில் மாறும்.
விஷப் பூச்சி மற்றும் பூச்சிகளின் எச்சம் படுவதால் சிலருக்கு வீக்கமும் புண்களும் ஏற்படும். இதனை கட்டுப்படுத்தவும் வீக்கங்களை தவிர்க்கவும், கரிசலாங்கண்ணி இலை மிகப்பெரிய உதவியாக இருக்கும். வீக்கங்கள் உள்ள இடத்தில் கரிசலாங்கண்ணி இலையை மேல் பூச்சாக எடுத்துக் கொள்ளும் பொழுது எளிதில் வீக்கம் குறையும்.
பல்வேறு சர்ம பிரச்சினைகள் உள்ளவர்கள் கரிசலாங்கண்ணி இலையை நன்றாக வெயிலில் காயவைத்து,அதனை முகத்தில் 30 நிமிடம் பூசுவதன் மூலம் முகத்திற்கு நல்ல பெழிவை தரும் முகப்பரு பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் போன்றவை எளிதில் மறையும்.

பாலூட்டும் தாய்மார்கள் அவர்களது உணவில் கரிசலாங்கண்ணி மாதம் ஒருமுறை எடுத்துக் கொள்வதன் மூலம் தாய்ப்பாலின் சுரப்பியானது அதிகமாக சுரக்கும் அதன் மூலம் குழந்தைக்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களும் எளிதில் குழந்தைக்கு கிடைக்கும்.
ரத்தசோகை மற்றும் சுவாச பிரச்சனை உள்ளவர்கள் கரிசலாங்கண்ணி இலையை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் அதில் உள்ள கால்சியம் பாஸ்பரஸ் பொட்டாசியம் வைட்டமின் பி12 ஊட்டச்சத்துக்களின் மூலம் பிரச்சனையானது நிரந்தர தீர்வு கிடைக்கும்.
வைட்டமின் ஏ கண்ணில் உள்ள அனைத்து விதமான பிரச்சினைகளை குணப்படுத்தும். கண்களில் பிரச்சனை உள்ளவர்கள் கரிசலாங்கண்ணி இலையை 15 நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.